பக்கங்கள்

14 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கை பக்கச்சார்பானது என்கிறது ஸ்ரீலங்கா!

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை எமக்கு கிடைத்துள்ளது. அது ஒருபக்கச்சார்பானது, அறிக்கை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம் நேற்று (13) தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பல விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை. பல விடயங்களில் அடிப்படைத் தவறுகள் காணப்படுகின்றன.
அறிக்கை ஒருபக்கச்சார்பானதாக கணப்படுகின்றது. எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாது பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கை தொடர்பில் நாம் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றோம். விரைவில் சிறீலங்கா அரசு தனது கருத்தை வெளியிடும் என அது மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஐ.நாவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு முன்வைக்கப்பட வேண்டும் எனவும், அதனை அடிப்படையாகக் கொண்டு சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுத்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.