பக்கங்கள்

26 ஏப்ரல் 2011

நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய தண்டனை வழங்கப்பட வேண்டும்!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்க ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஹோவார்ட் பெர்மன் தெரிவித்துள்ளார்.
ஹோவார்ட் பெர்மன் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நெருங்கிய சகா என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக நம்பகமான முறையில் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை எதிர்ப்பதனை விடவும் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய உயிருடன் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பிர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் நியாயமான நல்லிணக்கம் நாட்டில் ஏற்படும் என்பதனை எதிர்பார்க்க முடியாது என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
ஹோவார்ட், கலிபோர்னியா மாநில பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.