பக்கங்கள்

21 ஏப்ரல் 2011

புலிகளை அழித்த மகிந்த கட்டாக்காலி மாடுகளையும் பிடிப்பாராம்!

புலிகளை அழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு பெரும் தலையிடி கொடுக்கும் கட்டாக்காலி மாடுகளையும் பிடிக்கும் என்று ஸ்ரீலங்கா இனவாத அரசில் அங்கம் வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தென்மராட்சிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்டாக் காலிகளாகத் திரியும் மாடுகளால் தென்மராட்சிப் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் பலர் இந்தக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டினார்கள் இதற்கு உடன் தீர்வு காணப்படவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய டக்ளஸ் தேவானந்தாஒரு சில மாதங்கள் பொறுங்கள் கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகளைப் பிடிக்க முடியும். 30 ஆண்டுகளாக யுத்தத்தினால் தென்மராட்சிப் பிரதேச நாய்களுக்கு ஒரு வித நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் மக்களுக்குப் பரவக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது. விடுதலைப் புலிகளைப் பிடித்து அழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கட்டாக்காலி மாடு களையும் பிடிப்பார் என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.