பக்கங்கள்

13 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்!

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களின் பார்வைக்கு முனைவைக்கவேண்டும் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவின் அறிக்கையை எல்லா சிறீலங்கா மக்களும் பார்க்கவேண்டும். சிறீலங்காவில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான இந்த அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு முன்வைப்பதே சிறந்தது என அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரிபி தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறலகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதே அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கான வழி என பான் கீ மூன் தெரிவித்துள்ளார். எனவே அவர் தனது வார்த்தைகளை காப்பாற்ற வேண்டும்.
போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் இந்த அறிக்கையானது சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பான விசாரணைகளின் ஆரம்பமே தவிர முடிவல்ல. சிறீலங்காவின் வரலாற்றில் வன்முறைகள் என்பது ஒரு தொடர்கதை, எனவே புதிய வரலாற்றை உருவாக்குவதற்கு இந்த வன்முறைகள் தொடர்பில் நீதி கிடைக்கவேண்டும்.
பொதுமக்களின் பார்வைக்கு அறிக்கையை வெளியிடுவதன் மூலம் ஒரு சுயாதீன அனைத்துலக விசாரணைக்கான ஏதுநிலைகளை உருவாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.