பக்கங்கள்

09 ஏப்ரல் 2011

அனலைதீவில் குடும்பஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் அனலைதீவுப் பகுதியில் கடந்த 6ஆம் திகதி கொழும்பிலிருந்து சென்ற குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 3 வருடங்களுக்கு முன்னதாக கண்டியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற படுகொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் இச் சம்பவத்தில் அங்கு நிலை கொண்டுள்ள ஈபிடிபி அமைப்பின் அங்கத்தவர் தொடர்பு பட்டிருந்ததாகவும் குறித்த நபர் இவரது வீட்டில் தங்கியிருந்ததாகவும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்த முற்பட்ட வேளை இவரது வீட்டில் தங்கியிருந்த குறித்த கட்சியின் நபர் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. இந்த ஆயுதம் கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இந்த நிலையிலேயே வீட்டின் உரிமையாளரை புலனாய்வுத்துறையினர் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர். குறித்த ஈபிடிபி அமைப்பின் உறுப்பினர் சரணடைந்தால் மட்டுமே கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்போம் எனவும் புலனாய்வுத்துறையினர் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.