பக்கங்கள்

24 ஏப்ரல் 2011

ரொபேர்ட் ஓ பிளக்கை மகிந்த சந்திக்க மாட்டாராம்.

அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஒ பிளக்கை மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி பிளக் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட மனித உரிமை அறிக்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இலங்கையில் யுத்தக் குற்றச்செய்லகள் மற்றும் உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விடயங்கள் குறித்து பிளக் ஸ்ரீலங்கா இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்காவின்
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மீன்பிடி வள அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோர் பிளக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் பிளக் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் சிரேஸ்ட அமைச்சர்கள் கேள்வி எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.