பக்கங்கள்

26 நவம்பர் 2017

உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட தலைவர் பிறந்தநாள் விழா!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது 63-வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் தமிழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவு 12 மணிக்கு தந்தை பெரியார் தி.க.வினரால் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பொது இடத்தில் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து மாடி ஒன்றில் திரண்ட பெரியார் தி.க.வினர் கேக் வெட்டி தலைவரது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினர். அப்போது தேசியத் தலைவரையும் தமிழீழத்தையும் வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் களைகட்டின. முன்னதாக நேற்று மாலை கற்க கல்வி அறக்கட்டளை சார்பாக அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் 100 மாணவர்களுக்கு தலைவரின் புகைப்படத்துடன் கூடிய புத்தகப்பை ஏடுகள் வழங்கப்பட்டன. கரு. அண்ணாமலை தலைமையில் பள்ளி குழந்தைகள் தலைவருக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள் பாடி கேக் வெட்டி கொண்டாடினர்.தலைவரின் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு நாம் தமிழர் கட்சியினர் போர்வை, ரொட்டி வழங்கினர்.யாழ்ப்பாணத்தில் தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையிலும் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சிங்கள ராணுவம் இடித்த தலைவரின் வீட்டின் முன்பாக நள்ளிரவில் ராணுவ தடையை உடைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.தலைவர் பிறந்த நாளில் திடீரென வல்வெட்டித்துறையில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி பறக்கவிடப்பட்டது. வன்னிச்சி அம்மன் கோவில் அருகே இக்கொடி பறக்கவிடப்பட்டது.வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவர் பிறந்த வீடு தமிழர்களின் புனித இடமாக கருதபட்டது. அதை சிங்கள ராணுவம் இடித்தது. இந்த வீட்டை தமிழர்கள் இன்று சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.தலைவரின் இடிக்கப்பட்ட வீடு முன்பாக தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலும் தலைவரது பிறந்த நாள் விழா களைகட்டியது. பல்கலைக் கழகத்தில் புலிகளின் இலச்சினை,தலைவரின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.சுவிஸிலும் தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நிட்வால்டன் மாவட்டத்தில் நள்ளிரவு 12.00 மணிக்கு தலைவர்
 பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது.தமிழீழ தேசிய மாவீரர் நாளையொட்டி பிரான்ஸில் வீர விதைகள் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. தமிழீழ மாவீரர்களின் தியாகத்தை போற்றும் பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

24 நவம்பர் 2017

தமிழர்களின் சனத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும்!


தேசியக் கொடியை தாம் அவமதிக்கவில்லை என்று, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தில் சராசரியை விட மிகக்கீழ் மட்டத்திலேயே தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்கம் அமைந்துள்ளது.இந்தநிலை மாற வேண்டும். எங்களுடைய சனத் தொகைப் பெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் என,வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா பாடசாலையின் மாலதி சுப்பிரமணியம் அரங்கில் பாடசாலை அதிபர் பே.தனபாலசிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் 1, 007 பாடசாலைகள் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த 1, 007 பாடசாலைகளிலும் 120 பாடசாலைகளில் 20 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். யாழ்.மாவட்டத்திலும் கூட 20 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் காணப்படுகின்றன.வன்னிப் பகுதியில் இதன் எண்ணிக்கை அதிகமானதாகவுள்ளன. வடமாகாணப் பாடசாலைகளில் மிகப் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதற்குக் கடந்த காலயுத்தமே வழி வகுத்துள்ளது. யுத்தம் சுமார் நான்கு இலட்சம் மக்களைக் கொன்றொழித்துள்ளது. இவ்வாறு கொன்றொழிக்கப்பட்ட மற்றும் யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய மக்களில் சுமார்- 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட வயதெல்லையைக் கொண்ட மக்களின் தொகையே மிக அதிகம். இந்த வயதெல்லையே பிறப்பினைஉருவாக்கக் கூடிய வயதெல்லையாகும். ஆகவே, கடந்த-30 ஆண்டுகளில் ஏறக்குறைய இரண்டு தலைமுறைப் பிள்ளைகளை நாங்கள் இழந்திருக்கின்றோம். பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வீழ்ச்சிக்கு இதுவே முக்கிய காரணம். இலங்கையில் தற்போது சனத் தொகைப் பெருக்க விகிதத்தை இன அடிப்படையில் நோக்கினால் 1, 000 பேருக்கு 8.5 முஸ்லீம்களும் , 1, 000 பேருக்கு 5.7 சிங்களவர்களும், 1, 000 பேருக்கு 1.5 என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் காணப்படுகிறார்கள். ஆகவே, இலங்கையின் தேசிய மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தில் சராசரியை விட மிகக்கீழ் மட்டத்திலேயே தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்கம் அமைந்துள்ளது.இந்தநிலை மாற வேண்டும். எங்களுடைய சனத் தொகைப் பெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 நவம்பர் 2017

மாவீரர் குடும்பத்தை சார்ந்தவர் மட்டுமே பிரதான சுடர் ஏற்ற வேண்டும்!


இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று  மாவீரர்களது குடும்பங்கள் சார்பில், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமார் மனோகர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர்களது குடும்பங்கள் சார்பில், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமார் மனோகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்- “ எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் துணிவுடனும், உணர்வுடனும் தொடர்ச்சியாகவும் நினைவுகூர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக சமூகங்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. தற்போது மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழுச்சியுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள்.இந்த நிகழ்வானது – எந்த ஒர் அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும் தேர்தல் தேவைக்கு எவ்விதத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த உணர்வுடன் துயிலுமில்ல மண்ணை மிதித்தோமோ, எவ்வாறான மனநிலையில் வெளியில் வந்தோமோ அந்த மனோநிலை அவ்வாறே இப்போதும் பேணப்பட வேண்டும் என வேண்டுகின்றோம். குறிப்பாக – இதற்கு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். இந்த வணக்க உணர்வுநிலைக்கு இடையூறு ஏற்படும் வகையில் – மாவீரர் நிகழ்வுச் சூழலில் வைத்து அரசியல் விவகாரங்கள் தொடர்பாக செவ்விகள் எடுப்பதனைத் தவிர்க்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

1. பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.

 2. சமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை , எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என சகலரையும் சமமாகவே தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும். முதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது மாவீரர் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்.

 3. பிரிபடாத தமிழ் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதுவே எமது போராட்டத்தின் அடிப்படையாகும். எமது இந்த பிறப்புரிமைக்காக – லெப். ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லீம் மாவீரர்கள், 1985 முதல் 1990 வரை, வீரச் சாவடைந்துள்ளனர். 2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லீம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.

 4. தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை – ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது. அத்தோடு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது. இதேவேளை மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம். நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

04 நவம்பர் 2017

துரைசிங்கம் பிறேமதாஸ் (பிறேம்)லண்டனில் காலமானார்!


புளியங்கூடல் அமரர் சாந்தலிங்கம் மற்றும் தவமணி மண இணையரின் இளைய மருமகனும் சாந்தலதாவின்(லதா)அன்புக் கணவருமான துரைசிங்கம் பிரேமதாஸ்(பிறேம்)நேற்று நள்ளிரவு லண்டனில் காலமானார் என்ற செய்தி கூடலூர் மக்களையும் அவரது நட்பு வட்டங்களையும் பெரும் அதிர்சசிக்குள்ளாக்கி இருக்கிறது.இளம் வயதில் சாந்தலதாவும் அவரது ஏக புதல்வியும் சந்தித்திருக்கும் இந்தப் பேரிழப்பை ஈடு செய்ய எவராலும் இயலாது.இவர்களை எண்ணிப்பார்க்கும்போது எமது நெஞ்சமே வெடித்து விடும்போல் இருக்கிறது.இனி எப்படித்தான் அந்த அன்புத்தங்கையோடு பேசமுடியும்?மனமெங்கும் அன்பை மட்டுமே சுமக்கும் லதாவை நாம் எப்படித்தான் தேற்றமுடியும்?இந்த மரணச் செய்தியின் அதிர்ச்சசியில் இருந்து மீளமுடியவில்லை.பிறேம் அவர்களின் ஆத்மா நித்தியக் கமலங்களில்  அமைதிபெற புளியங்கூடல்.கொம் எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றது.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!