பக்கங்கள்

18 செப்டம்பர் 2010

மகிந்தவை புறக்கணித்த ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக செல்லும் வழியில் ஒரு நாள் பயணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் ஜெர்மனி சென்றிருந்ததுடன் இதன் போது அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மர்கலை சந்திக்க கடும் முயற்சி மேற்கொண்டதாகவும் எனினும் அது தோல்வியடைந்தாகவும் கூறப்படுகிறது.
ஜெர்மனிக்கான இலங்கை தூதுவர் மடுவேகெதர சந்திப்புக்கான போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதியின் இரகசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ்குணவர்தன குற்றம்சுமத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.