பக்கங்கள்

26 செப்டம்பர் 2010

பண்ணிங்க மட்டுமல்ல சிங்கமும் இப்ப கூட்டமாவே போகுது!

ஜ.நா பொதுக்கூட்டத்திற்காக ஜனாதிபதியுடன் சுமார் 130 பேர் நியூயோர்க் சென்றுள்ளனர். இப் பாரிய பட்டாளத்துக்காக ஹோட்டலில் ஒன்றின் ஒரு பகுதியையே அமெரிக்கா ஒதுக்கிகொடுத்துள்ள நிலையில், இதில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா உட்பட பலர் பகல்வேளைகளில், பொருள்கொள்வனவில் ஈடுபடுவதாகவும், இரவு வந்துவிட்டால் கேளிக்கை விடுதிகளிலும் களியாட்ட விடுதிகளிலும் தமது நேரத்தைச் செலவுசெய்வதாகவும் அறியப்படுகிறது. அங்காடிகளுக்குச் செல்லும் இவர்கள் பெரும் பொருட்செலவில் பல பொருட்களை வாங்கிக் குவிப்பதாக அறியப்படுகிறது.
இதேவேளை நமால் ராஜபக்ஷ இரவு நேரக் களியாட்ட விடுதிகளிலேயே தனது நேரத்தை செலவிட்டுவருவதாகவும், இருப்பினும் மது அருந்தக் கூடாது என்று தந்தையிட்ட கட்டளையை பேணிவருவதாகவும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அரசல் புரசலாகப் பேசிவருகின்றனர். இருப்பினும் பெண்களோடு பேசுவது குறித்து தகப்பனார் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காத காரணத்தால், அவர் அதைத் தொடர்ந்தும் செய்துவருகிறாராம். களியாட்ட விடுதிகளில் நமால் பெண்களோடு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் தனிப்பட்ட ரகசிய செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தனவே நமால் ரஜபக்ஷவை கவணித்துவருவதாக பிறிதொரு தகவல்தெரிவிக்கிறது.
""பண்ணிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும்"" என்று பஞ்ச் டயலக் இருக்கு ! ஆனா இப்ப சிங்கமும் பண்டிபோல மாறி கூட்டமாத்தான் போகுது ஜயா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.