பக்கங்கள்

25 செப்டம்பர் 2010

இலங்கைப் புகலிடக் கோரிக்கைப் பெண் தடுப்பு முகாமிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார்!

சன் சீ கப்பலின் மூலம் கனடாவில் சரணாகதி அடைந்துள்ள இலங்கை தமிழ் பெண் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தடுப்பு முகாமிலேயே குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
வன்குவார் பிரதேச வைத்தியசாலை ஒன்றில் குறித்த கர்ப்பிணி, பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையை பிரசவித்த பெண் தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழந்தையின் தந்தையும் குறித்த கப்பலின் மூலம் கனடாவில் சரணகாதி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய நாட்டு சட்டத்தின் பிரகாரம் பிறந்த குழந்தைக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு புகலிடம் வழங்குவது குறித்த வழக்கு விசாரணைகள் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்ததாகவும், குழந்தையை பிரவசித்திருப்பதனால் விசாரணைகள் 28ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் தமக்கு உரிய பாதுகாப்பு கிடையாதெனத் தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி எம்.வீ. சன் சீ கப்பலின் மூலம் 492 புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடவை சென்றடைந்துள்ளனர்.
ஆள் அடையாளத்தை உறுப்படுத்தாத பெருமளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கப்பலின் மூலம் புகலிடம் கோரியவர்களில் 15 பேர் மட்டுமே இதுவரையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.