பக்கங்கள்

25 செப்டம்பர் 2010

குடாநாட்டில் பெருகும் விவாகரத்துக்கள்!

யாழ். மாவட்டத்தில் விவாகரத்துக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது என நீதிமன்றப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
விவாகரத்துப் பெறுபவர்களில் அரச ஊழியர்களே அதிகளவானவர்களாக இருக்கின்றார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
இந்த ஆண்டில் இதுவரை விவாகரத்துக்கோரி 46 பேர் யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 123 ஆக இருந்தது. 30 வயதுக்குட்பட்ட இளம் தம்பதியினரே விவாகரத்துக் கோருவதில் முன்னணி யில் திகழ்கின்றனர் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
புரிந்துணர்வின்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்மை, பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான மனோதிடம் இல்லாமை என்பனவே விவாகரத்துக்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் என்று சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.
விவாகரத்துப் பெற வருபவர்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த நீதிமன்றங் கள் முயச்சிக்கின்ற போதும் பிரிந்து செல்வதில் தம்பதிகள் பிடிவாதமாக இருக்கின்றனர் என மாவட்ட நீதிமன்ற உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.