பக்கங்கள்

23 செப்டம்பர் 2010

கைவிடப்பட்ட புலிகள் முகாமில் கொள்ளையடிக்க முயன்ற 32 பேர் கைதாம்!

தற்போது இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பிரதேசத்தில், விசுவமடு, கொட்டியடிப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற 12 பேரைத் தாம் கைதுசெய்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி கூறியுள்ளார். அங்கிருந்த பொருட்களை ஏற்றியபடி நின்ற 7 ட்ராக்டர்களையும் ஒரு லொறியையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட நபர்கள் விசுவமடுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்த எவ்வகையான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்ற விவரம் எதையும் போலீஸ் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.