பக்கங்கள்

11 செப்டம்பர் 2010

நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் – தமிழ் அரசியல் கைதி.

நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார்.
நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சியை சேர்ந்த ஆனந்தராஜா என்ற கைதி பல வருடங்களாக விசாரணைகளின்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
2006ம் ஆண்டு விடுதலைப்புலி சந்தேக நபராக இவர் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரது தாய் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார். தந்தை இறந்து பல வருடங்களாகின்றது. தற்போது உறவினர்களும் எங்குள்ளனர் என்று தெரியாத நிலையில் தான் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மேற்படிக்கைதி தான் விரைவில் சுயநினைவை இழக்கலாம் என்கூறியுள்ளார்.
அவ்வாறு சுயநினைவை இழந்த நிலையில் இறந்து போனால் மனிதாபிமானமுள்ளவர்கள் தன் வேண்டுதலை நிறைவேற்றுமாறும் கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.