பக்கங்கள்

12 செப்டம்பர் 2010

போதையில் சுருண்டு விழுந்த கருணா: நெருப்பே நெருப்பைச் சுடுகிறது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மதுபோதையில் புரண்டு விழுந்த சம்பவம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்றுள்ளது என்று பிரதேசவாதம் பேசும் நெருப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த பிரதி அமைச்சர் கருணா அளவுக்கு அதிகமாக மதுபானத்தை உட்கொண்டு நிலத்தில் விழுந்து புரண்டுள்ளார் என்றும் அவ் இணையம் தெரிவித்துள்ளது. தற்போது எல்லாம் மிகுந்த மதுபோதையில் மிதக்கும் கருணாவின் உடல் நிலை பாதிப்படைந்து இருப்பதாகவும் அறியப்படுகிறது.
சிறிய அளவில் மதுவைப் பாவித்தாலும், அவர் உடல் பெரும் வேறுபாட்டை வெளிக்காட்டுவதாகவும், அவர் உட்கொள்ளும் சிறிய மதுபானத்தைக் கூட அவர் உடல் தாக்குப்பிடிக்காதால், கொஞ்ச மது பானத்தை அருந்திவிட்டு அவர் நிலத்தில் உருண்டு புரள்வதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தற்போது தென்னிலங்கையில் இடம்பெறுகின்ற திருமணங்கள், விருந்துபசாரங்கள் போன்றவற்றில் அளவுக்கதிகமாக மது பானத்தை அருந்திவிட்டு, ஆடல் பாடல் என்று தடம்புரண்டு வருகின்றார்.
ஆயுத வழிபோராட்டம் மூலம் தமிழினத்திற்கு உரிமையை பெற்றுகொடுக்க போகின்றார்கள் என்று புறப்பட்ட இவர்கள் இன்று தென்னிலங்கை சிங்கள இனவாதிகளின் மதுவுக்கும், மாதுவுக்கும் மயங்கி இனத்தையே விற்று பிழைக்கும் சந்தர்ப்பவாதிகள் ஆகி விட்டனர். இதனையே இலங்கை அரசு தற்போது தம்மோடு சேர்ந்து இயங்கும் எல்லோருக்கும் பழக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.