பக்கங்கள்

03 செப்டம்பர் 2010

முள்ளிக்குளம் பிரதேசத்தில் நிலையான கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டதாகத் கோதபாய தெரிவித்துள்ளார்.



தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டின் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என மன்னாரில் கடற்படை முகாம் அங்குரார்ப்பண விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
பயங்கரவாதத்தை இல்லதொழித்ததன் மூலம் நாடு அடைந்துள்ள சமதானத்தை நிலைநாட்டவும், தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்திற் கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஓர் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்துவதற்காக பயன்படுத்திய முள்ளிக்குளம் பிரதேசத்தில் நிலையான கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசியப் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் முக்கிய பொறுப்பு கடற்படையினருக்கு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.