பக்கங்கள்

17 செப்டம்பர் 2010

எரிக் சொல்கெய்மை வித்தியாதரன் சந்தித்தார்.

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான என்.வித்தியாதரன் இன்று காலை நேரில் சந்தித்து உரையாடி உள்ளார்.
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான சமாதான பேச்சுக்களின்போது நோர்வே மத்தியஸ்தம் வகித்தது.
நோர்வேயின் சமாதான தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டிருந்தார். அதே போல இலங்கையில் சமாதான முயற்சிகளில் மிக நீண்ட காலமாக அதீத ஈடுபாடு காட்டி வரும் புத்திஜீவிகளில் வித்தியாதரனும் ஒருவர்.இருவருக்குமிடையிலான சந்திப்பு எரிக் சொல்ஹெய்மின் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலம் வரை இருவரும் பரஸ்பரம் பேசி இருக்கின்றார்கள். இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள்-தமிழர்களின் அரசியல் எதிர்காலம்-யுத்தத்தின் இறுதி நாட்களில் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் ஆகியன குறித்து இப்பேச்சுக்கள் அமைந்தன.
ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் நியூயோர்க்கில் அடுத்த வாரம் ஆரம்பமாகின்றது.இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் கலந்து கொள்கின்றார். இவரை அங்கு நோர்வே நாட்டுப் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று சந்தித்துப் பேச உள்ளது.
இவ்வுயர் மட்டக் குழுவில் எரிக் சொல்ஹெய்மும் அங்கம் வகிக்கின்றார். எனவே இன்று இடம்பெற்ற எரிக் சொல்ஹெய்ம்-வித்தியாதரன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.