பக்கங்கள்

03 செப்டம்பர் 2010

ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகின்றனர்.



ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அரசியல் சாசனத் திருத்தத்தை ஆதரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஏர்ல் குணசேகர, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் மனுச நாணயக்கார ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கட்சி தாவுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள அரசாங்கம் இடதுசாரிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே மேலும் உறுப்பினர்களைக் கவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.