பக்கங்கள்

24 செப்டம்பர் 2010

கிளிநொச்சியில் இளம்பெண்கள் உள்ள வீட்டினுள் நுழைய முயன்ற சிப்பாயை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டிய தந்தை!

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகை குளம் 10 வீட்டுத்திட்டத்தில் திருமணமாகாத 3 இளம் பெண்களுள்ள ஒரு வீட்டினுள்ளே புகுவதற்கு முயற்சித்த இராணுவ வீரர் ஒருவரை வீட்டு உரிமையாளரான தந்தை ஒடஒட விரட்டி விரட்டி கத்தியால் வெட்டியுள்ளார்நேற்று இரவு 9.15 மணியளவில் கனகாம்பிகை குளம் 10 வீட்டுத்திட்டத்திலுள்ள 1 ஆம் இலக்க வீட்டிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வீட்டில் அனைவரும் படுத்துறங்கிய நேரம் வீட்டிற்குள்ளே ஒருவர் புகுவதற்கு முயற்சிப்பதை அவதானித்த தந்தையார் கத்தி எடுத்துக்கொண்டு உரக்கச் சத்தமிட்டு கொண்டு குறித்த நபரை துரத்த ஆரம்பித்ததும் அந்நபர் ஒடி கல்லொன்றின் பின்னால் ஒளிந்துகொண்டு தந்தையாரை தாக்கியுள்ளார்.
இதன்போது சுதாரித்துக்கொண்ட தந்தை அந்நபரை சராமரியாக கத்தியால் வெட்டியுள்ளார். இதனை சமாளிக்க முடியாத அந்நபர் தப்பி ஒட முயற்சித்துள்ளார். இதன் போது கம்பி வேலியில் குறித்த நபரின் சப்பாத்து மாட்டிக்கொண்டது. ஆயினும் சப்பாத்தை விட்டுவிட்டு தொடர்ச்சியான வெட்டுக்காயங்களுடன் அந்நபர் தப்பியோடிவிட்டார்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் குறித்த சப்பாத்தை எடுத்துக்கொண்டு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போது அது ஒரு இராணுவ வீரர் எனத்தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் தமக்கு அறிவிக்குபடி கூறிச் சென்றனர். இதேவேளை இன்று காலை உழவு இயந்திரமொன்றில் காயமடைந்த இராணுவ வீரர் ஒருவரை இராணுவத்தினர் அழைத்துச் சென்றதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.