பக்கங்கள்

15 செப்டம்பர் 2010

மஹிந்த நியூயோர்க் செல்கின்றார்; கனடாவில் எதிர்ப்பு போராட்டம்!

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுக் கூட்டத் தொடரில் பங்குபற்ற மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 18ஆம் திகதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கின்றார். மஹிந்த அங்கு கூட்டத்தில் உரையாற்றுவதுடன் அங்கு ஐந்து நாள்கள் தங்கியிருந்து பல்வேறு கூட் டங்களிலும் வைபவங்களிலும் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் வருகையைக் கண்டித்து கனேடியத் தமிழர் தேசிய அவை கனடா, டொரண்டோவில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்னாலும் மொன்றியலிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்னாலும் நாளைமறுதினம் 17ஆம் திகதி கவன ஈர்ப்புப் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அமெரிக்காவுக்கு வருகை தந்தால் இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கனேடியத் தமிழர் தேசியப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.