பக்கங்கள்

05 செப்டம்பர் 2010

வெள்ளை வானில் தானும் தூக்கப்படலாம் என்கிறார் சந்திரிகா!



சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் அப்பட்டமான ஜனநாயக மீறல் என முன்னாள் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு தாம் முன்வைத்த அரசியல் தீர்வுபொதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றும் யோசனையை தாம் கொண்டிருந்த போதும் தற்போதைய வெளிநாட்டமைச்சர் ஜிஎல் பீரிஸ், இரண்டு வருடங்கள் வரை அதனை நீடிக்கலாம் என தமக்கு ஆலோசனை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் பதவிக்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டபோது தாம் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவள் அல்ல என சந்திரிகா தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின், இரண்டு வருட ஆட்சி தொடர்பாக சந்திரிகாவிடம் வினாவிய போது அது தொடர்பாக தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் பதிலளித்தால், தமக்கும் வெள்ளை வேன் அனுப்படும் என கவலை வெளயிட்டார்.
சுந்திரிக்காவின் ஆட்சியின் போது வெள்ளை வேனால் கடத்தப்பட்டு காணாமல் போன தமிழ் இளைஞர்கள் யுவதிகள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.