பக்கங்கள்

27 செப்டம்பர் 2010

யாழ். மாவிட்டபுரம் பகுதியில் குண்டுவெடிப்பு: படைவீரர் பலி.

யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
பிரதேசத்தை துப்புரவு செய்து கொண்டிருந்த போதே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்திருக்கலாம் என நம்பப்படுவதாக இராணுவப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.