பக்கங்கள்

11 செப்டம்பர் 2010

களைகட்டாத ஜேர்மனிய மாநாடு.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஜேர்மனியில் நடாத்தும் "அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மகாநாடு இன்று 10:00 மணிக்கு ஜேர்மனியில் RHEINE என்னும் இடத்திலுள்ள Elisabethschule – Aula பாடசாலை மண்டபத்தில் ஆரம்பம் ஆனது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலக் கல்விப் பொறுப்பாளரும் பேராசிரியர் இ. பாலசுந்தரம் இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்குகின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன் , பா.அரியநேந்திரன், யோகேஸ்வரன் ஆகியோரோடு மூத்த ஊடகவியலாளர் வித்யாதரனும் பேராளராகக் கலந்து கொண்டார். ஆயினும் இம்மாநாடு சோபிக்கவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.