பக்கங்கள்

30 செப்டம்பர் 2010

அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

சம்மாந்துறை நெய்னாமடு கல்லாற்றில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நெய்னாமடு கல்லாற்றில் நேற்றுக் காலை 7 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, பொலிஸார் ஆற்றிலிருந்து பெண்ணின் சடலத்தை மீட்டனர். எனினும் சடலம் அடையாளம் காணமுடியாதளவிற்குப் பழுதடைந்துள்ளதுடன் ஒருசோடி செருப்பும் உடைந்த கைக்கடிகாரமும் சடலத்துடன் மீட்கப்பட்டுள்ளன.
சடலம் அடையாளம் காண்பதற்காகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.