பக்கங்கள்

29 செப்டம்பர் 2010

அம்பாறையில் மீள் குடியேற்றபட்ட தமிழ் மக்கள் சிங்களர்களால் விரட்டியடிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் மக்களை அங்குள்ள சிங்கள மக்கள் விரட்டியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1990ம் ஆண்டளவில் இடம்பெற்ற இயல்பற்ற சூழ்நிலைகளின் போது இடம்பெயர்ந்த இந்த மக்கள் அம்பாறை ஊரணி பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு நிலை கொண்டிருந்த சிறப்பு அதிரடிப் படையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்தே அவர்கள் குடியேற்றத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும் அங்கு குடியேறுவதற்காக சென்ற மக்களை, சிங்களவர்கள் சிலர் விரட்டி அடித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனினால், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான நிலப்பகுதிகள் தாரை வார்த்து வழங்கப்படுகின்றன.
இதன் காரணமாகவே தமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குற்றம் சுமத்தியுயள்ளனர்.
கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வெறும் 25 குடுமபங்களாக இருந்து இடம்பெயர்ந்த இந்த மக்கள் 20 வருடங்களின் பின்னர் தற்போது 100 குடும்பங்களாக அதிகரித்துள்ளன.
அவர்கள் அக்கரைப்பற்று மற்றம் பொத்துவில் பகுதிகளில் தங்கி இருந்த நிலையில் மீள்குடியேற்றம் செய்ய உள்ளனர். ஏனினும் அவர்களை மீள்குடியேற அனுமதிக்காமல் சிங்களவர்கள் துரத்தி அடித்துள்ள நிலையில் அநாதரவான நிலையில் அவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.