பக்கங்கள்

30 செப்டம்பர் 2010

மட்டுவிலில் வீடு புகுந்து ஆயுதமுனையில் கொள்ளை!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஆயுத முனையில் அச்சுறுத்தி பல இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிட்டுள்ளனர்.நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மட்டுவில் தெற்கில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. கணவன் வெளியில் சென்ற வேளை வீட்டினுள் நுளைந்த இனம் தெரியாத இருவர் ஆயுத முனையில் தனிமையில் இருந்த பெண்னை அச்சுறுத்தி நகைகளை அபகரித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
நீளக் காட்சட்டை அணிந்திருந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர் எனவும் துப்பாக்கியை காட்டி பயமுறுத்தியே நகைகளை கொள்ளையடித்தனர். என்றும் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் படையினர் என்றும் வீட்டை சோதனையிட வேண்டும் என அவர்கள் அந்தப் பெண்ணை அச்சுறுத்தினர்.
தாலிக்கொடி மற்றும் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பணமும் கொள்ளையிடப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.