பக்கங்கள்

26 செப்டம்பர் 2010

நாமல் அனார்கலியிடம் வேண்டுகோள்: வழக்கு வாபஸ்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமலின் வேண்டுகோளுக்கிணங்க பிரபல நடிகையும், தென் மாகாண சபை உறுப்பினருமான அனார்கலி ஆகர்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார். துமிந்த சில்வா மேலும் சிலருடன் வந்து தன்னை கடத்திச் செல்ல முயற்சித்ததாக வெள்ளவத்தைக் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய, கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அனார்கலி சார்பில் ஆஜரான சட்டத்தரணி வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். இதுசம்பந்தமாக, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு வெள்ளவத்தைக் காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதவான் ருச்சிர வெல்லவத்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் 16ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அன்றைய தினம் இந்த வழக்கு விசாரணை முடிவுக்குக்கொண்டுவர வாய்ப்பிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.