பக்கங்கள்

20 செப்டம்பர் 2010

கரடியனாறு வெடிப்புக்கு இரு வல்லரசுகளின் போட்டியே காரணமாம் : சந்திரசேகரன்.

இலங்கையில் இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையில் நடைபெறும் போட்டியின் வெளிப்பாடே மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமாகுமென மக்கள் சந்தேகிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று மட்டக்களப்பு ‘கோப் இன்’ விடுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே சந்திரசேகரன் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மக்கள் சந்தேகிப்பது போல இச்சம்பவம் அவ்வாறு இடம்பெற்றிருக்குமானால் கடந்த 30வருடங்களில் இடம்பெற்ற பாரிய யுத்தத்தை விட மிகவும் அச்சம் நிறைந்ததாக இது இருக்கும்.
இதனால் இப்பகுதியில் அச்சநிலை காணப்படுவதை உணர முடிகின்றது.
இன்று நமது நாடு மிக மோசமான அராஜகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. சர்வாதிகார போக்கை அரசாங்கம் கடைபிடிப்பதால் மக்கள் படுபாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.