பக்கங்கள்

10 செப்டம்பர் 2010

இலங்கை குறித்து இந்தியாவிடம் அறிக்கை கோரியுள்ள அமெரிக்கா.

இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் ஆசியா கண்டத்தைப் பாதிக்கும் முறைமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்திய அரசாங்கத்திடம் விசேட அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அரசியலமைப்பு திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை அறியும் முகமாகவே இந்த அறிக்கையினை அமெரிக்கா கோறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கோரிக்கையினைக் கருத்தில் கொண்டுள்ள இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மேற்படி அறிக்கையினைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.