பக்கங்கள்

09 செப்டம்பர் 2010

மீண்டும் அலெக்ஸ் கனேடிய ஊடகத்துக்கு செவ்வியளித்துள்ளார்.

கனடாவில் இருந்து 07 ஆண்டுகளுக்கு முன் நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன் சஞ்சீவ் குஹேந்திரராஜா எனபவர் மீண்டும் கனடா வருகின்றமைக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரகசிய இடம் ஒன்றில் இருந்து கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அண்மைய நாட்களில் தொலைபேசி மூலம் வழங்கி உள்ள பேட்டி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டமை, கோஷ்டி மோதல்களில் ஈடுபட்டு வந்த குழுக்களுடன் தொடர்பு ஆகியவற்றுக்காகவே நாடு கடத்தப்பட்டு இருந்தார்.
255 இலங்கையர்களுடன் கடந்த வருடம் அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டுச் சென்ற அகதிக் கப்பல் ஒன்று இந்தோனேஷிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட போது அக்கப்பலில் இவரும் பயணித்து இருந்தார். கப்பலில் புறப்பட்டு வந்திருந்த தமிழர்களின் பேச்சாளராக அலெக்ஸ் என்கிற பெயரில் செயற்பட்டார். ஆனால் அவர் பின்னர் மர்மமான முறையில் காணாமல் போய் இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.