பக்கங்கள்

22 செப்டம்பர் 2010

இலங்கை இராணுவத்துக்கு உடந்தையாக இருந்த நபர் கடத்தல்.

போர் நடந்த காலகட்டத்தில் இலங்கை இராணுவத்துக்கு பல உதவிகளைப் புரிந்து உடந்தையாக இருந்துவந்த நபர் ஒருவரை வான் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். மட்டக்களப்பு கல்லடியில் செப்ரம்பர் 15 ஆம் திகதி இக்கடத்தல் நடந்துள்ளதாக கடத்தப்பட்டவரின் மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கடத்தப்பட்டவர் கல்லடியிலுள்ள தெருச்செந்தூரை வசிப்பிடமாகக் கொண்ட 30 வயதான முனுசாமி நரேந்திரன் எனக் கூறப்படுகிறது.
நரேந்திரன் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிவந்து திருமணம் முடித்து தனது குடும்ப வாழ்வில் இணைந்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு நகரசபை உறுப்பினர் ஒருவரின் கடத்தலைத் தொடர்ந்து இவர் கடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.