பக்கங்கள்

27 செப்டம்பர் 2010

கல்வியங்காடு குளத்தில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக படையினர் தேடுதல்.

கல்வியங்காடு-செம்மணிப் பகுதியிலுள்ள சந்திரசேகரப் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையிலுள்ள குளம் ஒன்றினுள் பெருந்தொகை ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இலங்கைப் படையினர் அங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான படையினர் இத்தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டனர். நீர்ப்பம்பிகளைப் பயன்படுத்தி குளத்து நீரை இறைத்து வெளியேற்றி நடந்த இத்தேடுதல் நேற்று மாலை வரை நடந்துள்ளது. ஆனால் படையினர் எதுவித ஆயுதங்களையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1995 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை கூலிப் படைகளுக்கு உக்கிர சண்டை நடந்த முக்கிய இடம் அப்பகுதியாகும். மேலும், 1996-97 காலப்பகுதியில் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட 600 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பகுதியும் அதுவென்பது தெரிந்ததே.
இக்குளத்தில் நடந்த தேடுதல் போலவே யாழ்ப்பாணத்தில் பிற பகுதிகள் சிலவற்றிலும் தேடுதல்கள் நடந்துள்ளதாக அறிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.