பக்கங்கள்

28 செப்டம்பர் 2010

மன்னாரில் இளைஞர் ஒருவரை கடத்த முயன்ற குமபல்!

மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து போக்குவரத்து சங்கத்தின் தலைவரான 36 வயதுடைய பரமலிங்கம் ரமேஸ் கடந்த சனிக்கிழமை இரவு இனம் தெரியாத குழுவினரால் தாக்குதலுக்குள்ளானார்.
குற்றுயிராக வீதியில் வீழ்ந்து கிடந்து இவரை ரோந்து சென்ற இராணுவத்தினர் மன்னார் பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சனிக்கிழமையிரவு மோட்டார் சைக்கிளில வீடு நோக்கி; புறப்பட்ட ரமேஸ் வேறு மோட்டார் வண்டியில்வந்த நபர்கள் வழிமறித்து தாக்கி
அசிற் ஊற்ற முயன்ற போது தாக்கிய குழுவைச் சேர்ந்த ஒருவர் தடுத்து நிறுத்தி விட்டார். வாகனத்தின் முன் இருக்கை ஒன்றில் இவரை ஏற்றினர். கடத்திச் செல்ல முயன்ற போர் ரமேஸ் சுதாகரித்துக் கொண்டு வாகன சாரதியின் முகத்தைச் சுற்றி மூடப்பட்டிருந்த துணியை கிழித்ததுடன் சாரதியையும் அடையாளம் கண்டு கொண்டார்.
பின் சாரதியின் பக்கமாக உள்ள கதவு வழியாக தலையை வெளியே நீட்டி உதவி கேட்டுப் பெரிதாகச் சத்தமிட்டுள்ளார். இதனால் பீதி அடைந்த காடையர்கள் வாகனத்தில் இருந்து இவரை வெளியே வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.