பக்கங்கள்

07 செப்டம்பர் 2010

பிள்ளைகளுடன் தீக்குளிப்பேன்– மட்டு மாநகர சபை உறுப்பினரின் மனைவி.

தனது கணவன் இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பாத பட்சத்தில் பிள்ளைகளுடன் மாநகர சபைக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, மர்மமான முறையில் காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் மனைவி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது கணவன் விடயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து பிள்ளைகளுடன் தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன் என்று அவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கூறியுள்ளார்.
காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவரது மனைவியை சந்தித்து ஆறுதல் கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி முதல் குறித்த மாநகர சபை உறுப்பினர் மர்மமான முறையில் காணாமல் போனதையடுத்து, தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு காணாமல் போனவரின் மனைவி இதன்போது முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததோடு தனது கணவனை கடத்தியவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் என்றும் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.