பக்கங்கள்

16 செப்டம்பர் 2010

த.தே.கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை இழுக்க ரணில் முயற்சியா?

சமீபத்தில் 18வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேறியது. இதன் மூலம் ஜனாதிபதி எத்தனை தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்ட அங்கிகாரம் கிடைத்துள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் அமைவாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க அதிகாரம் கொண்டுள்ள நாடாளுமன்ற சபைக்கு, எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர்களில் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர் என சில இணையத்தளங்கள் செய்திவெளியிட்டு வருகின்றன. அவர் மகிந்தவுக்கு உதவுவதற்காக தனது கட்சியை நாசம்செய்து வருவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், இவர் ஏன் சுமந்திரனை நியமிக்கவேண்டும் என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து, அதனைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், சுமந்திரன் எம்.பியை தமது பக்கம் இழுக்க ரணில் முயல்வதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.