பக்கங்கள்

07 செப்டம்பர் 2010

கனடா நோக்கி மற்றொரு கப்பல் வருகிறதாம்.

இலங்கைத் தமிழர்களுடன் கனடா நோக்கிப் புதிய கப்பல் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது என்று கனடாவின் CTV நேற்று இரவு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுடன் கனடாவுக்கு வருகின்ற மூன்றாவது கப்பல் இதுவாகும். இதை எதிர்கொள்கின்றமைக்கு கனேடிய அதிகாரிகள் தயார்ப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இச்செய்தி தெரிவிக்கின்றது. ஆயினும் பயங்கரவாத விவகாரங்கள் சம்பந்தப்பட்ட சர்வதேச நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ரொஹான் குணரட்ண சிறிது மாறுபட்ட தகவலைக் கூறுகின்றார். கனடாவுக்கு புறப்படுகின்றமைக்கு அனைத்து ஏற்பாடுகளுமே தயாரான நிலையில் தாய்லாந்தில் கப்பல் ஒன்றை எதிர்பார்த்து இலங்கைத் தமிழர்கள் ஒரு தொகையினர் காத்து நிற்கின்றனர் என்கிறார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.