பக்கங்கள்

04 செப்டம்பர் 2010

இத்தாலியில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.


அரசமைப்புத் திருத்த யோசனையை எதிர்த்து இத்தாலியில் வாழும் சிங்களவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளார்கள். இத்தாலிக்கான இலங்கைத் தூதரகம் முன்பாக எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.00 மணியில் இருந்து மதியம் 1.00 மணி வரை இவ்வார்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
இத்தாலியைத் தளமாகக் கொண்டு செயற்படும் Movement for Democracy in Sri Lanka என்கிற சிங்கள அமைப்பு இவ்வார்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் அங்குள்ள இலங்கையர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று இவ்வமைப்பு அழைப்பு விடுத்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.