பக்கங்கள்

01 செப்டம்பர் 2010

சிறுமி மீது பாலியல் தொல்லை! மூன்று இளைஞர் விளக்கமறியலில்.



15 வயதுச் சிறுமியை கூட்டாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர் என்கிற சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நகரத்தில் அமைந்திருக்கும் பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 29 ஆம் திகதி மாலை நேரம் பஸ்ஸிற்காக காத்திருந்த சிறுமியை அங்குள்ள மலசல கூடத்துக்குக் கொண்டு சென்று பாலியல் தொல்லை செய்தனர் என்று இம்மூவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மூவரையும் சம்பவ தினம் கைது செய்தவர்களான மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸார் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். மன்னார் நீதிவான் கே.ஜீவராணி சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்கின்றமைக்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.