பக்கங்கள்

23 செப்டம்பர் 2010

வடபகுதியில் சிங்களவர்களின் வருகை யாழ்.மக்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது!

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை அடுத்து நடைபெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணம் – கண்டி வீயை அரசு திறந்தது.
இந்த ஏ-9 வீதியை திறத்ததன் மூலமாக தென்பகுதியில் வாழும் சிங்களவர்கள் அதிகளவில் வடபகுதிக்கு விஜயம் செய்வார்கள் அதன் மூலமாக தமது யுத்த வெற்றிகளை அவர்கள் நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என சிறிலங்கா அரசு எதிர்பார்த்தது.
அந்த ஆசை எதிர்பார்த்ததனைவிடவும் அதிகமாகவே நிறைவேறி வருகின்றது எனலாம். கடந்த 90ம்; ஆண்டு காலத்திற்கு பிந்திய காலத்தில் வவுனியாவுக்கு அப்பால் சிற்களவர்கள் செல்வதற்கு அவசியம் இருக்கவில்லை. அவர்கள் வடபகுதிக்கு செல்வதனை தவிர்த்து வந்தார்கள். 2002ம் ஆண்டுகளில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அதனை அடுத்து ஏற்பட்ட பாதை திறப்பின் போது அவசியம் தேவைகள் இருக்கும் சிங்களவர்கள் மட்டும் வடக்கிற்கு சென்று வந்தார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலையில் தினசரியாக நூற்றுக்கணக்கிலான வாகனங்களில் ஆயிரக்கணக்கிலான சிங்களவர்கள் வடக்கிற்கு சென்று வருகின்றார்கள். ஏறக்குறை மூன்று தசாப்த காலத்தின் பின்னரான காலப்பகுதியில் யாழ்.குடாநட்டை தற்போது சிங்களவர்கள் ஆக்கிரமித்த வருகின்றார்கள்.
வன்னிப்பகுதிக்குள் அவர்கள் செல்வது குறைவாகக்காணப்பட்டாலும் ஏ-9 வீதியில் அவர்களின் நடமாட்டத்தை அதிகம் காணமுடிகின்றது. சிறிலங்கா அரசினால் ஆணையிறவில்.
அமைக்கப்பட்டுள்ள யுத்தவெற்றி நினைவுத்தூபி மற்றும் பல இடங்களை அவர்கள் வன்னிப்பகுதிக்குள் பார்க்கின்றார்கள். ஏ-9 வீதியில் பல இடங்களில் சிறிலங்கா படையினரால் அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதிகளில் கூட்டம் கூட்டமாக அவர்களை பார்க்கமுடிகின்றது.
யாழ்.குடா நாட்டிற்குள் அவர்கள் பிரபல்யம்மிக்க இந்து ஆலயங்கள் மற்றும் நாகவிகாரை போன்ற இடங்களுக்கும் அவர்கள் செல்வதனையும் பார்க்கமுடிகின்றது. அண்மையில் நடைபெற்ற நல்லூர் திருவிழாவின் போதும் அதிகளவிலான சிங்களவர்கள் கலந்து கொண்டனர். தென்பகுதி சிங்களவர்களின் சுற்றுலாப்பயண வருகை யாழ்.மக்களுக்கு எரிச்சலினை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.