பக்கங்கள்

04 செப்டம்பர் 2010

லண்டன் ஹரே கிருஷ்ணா கோயில் வெடிப்பு- உயிரிழப்பு இல்லை.



லண்டன் லெசிஸ்டர் பகுதியில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா கோயிலில் நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கோயில் திருவிழா பிரசாதங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது பயன்படுத்தப்பட்ட பெரிய சமையல்வாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே இவ்வெடிப்பு இடம்பெற்றது. இதனால் சமையல் நடந்துகொண்டிருந்த கட்டடம் பலத்த சேதத்துக்கு உள்ளானது. ஆனால் இவ்வெடிப்புக்குச் சில செக்கன்களுக்கு முன்னர் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் அங்கிருந்த கிட்டத்தட்ட 30 பேரும் அங்கிருந்து தப்பி வெளியில் ஓடிவிட்டதால் நிகழவிருந்த பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
ஏராளமான பக்தர்கள் இந்தச் சமையலில் ஈடுபட்டிருந்தனர். சமையல் முடிந்த பின்னர் சமையல் வாயுக் கொள்கலனின் குழாயை அவர்கள் அகற்றிவிட்டாலும், கொள்கலனை மூடாமல் விட்டதாலேயே இந்தக் கசிவு ஏற்பட்டது. எனினும், குழாயை நீக்கிய நபர் அங்கு நிகழப்போகும் ஆபத்தை உடனும் உணர்ந்து அங்கிருந்து தானும் வெளியேறி, மற்றவர்களையும் வெளியேற்றினார். இவர்கள் வெளியேறி 30 செக்கன்களுக்குள் அவ்வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு உடனும் வந்த தீயணைப்புப் படையினர் குறித்த கட்டடத்தில் தேடுதல் நடத்தினர். மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. அதன் பின்னரே ஒருவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் ஒருவரும் உயிரிழக்கவும் இல்லை காயப்படவும் இல்லை என்பது ஒரு அதிசயம் என்று தீயணைப்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.