பக்கங்கள்

24 செப்டம்பர் 2010

ஒபாமாவுக்கு 10 அறைகள் மட்டுமே; ஆனால் மஹிந்த 4 தளங்களிலுள்ள அனைத்து அறைகளும்.

ஐக்கிய நாடுகளின் பொதுவிவாதத்தில் கலந்துகொள்ளச் சென்ற தூதுக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் எண்ணிக்கையில் இலங்கை சாதனையே படைத்துள்ளது எனலாம். நியூயோர்க்கிலுள்ள ஹோட்டலில் இவர்கள் தங்குவதற்கென அந்த ஹோட்டலின் 4 தளங்களிலுள்ள முழு அறைகளுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் வந்தவர்கள் தங்குவதற்கு 10 அறைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை ஐ.தே.க நா.உ சாந்தினி கொங்கஹேஜ் தெரிவித்துள்ளார். பல மில்லியன் ரூபா செலவு செய்து இலங்கையிலிருந்து 130 பேர் இம்மாநாட்டுக்காகச் சென்றுள்ளனர். ஆனால் மாநாட்டு அரங்குக்குள் 4 பேர் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 130 பேரில் 80 பேருக்கு 120,000 ரூபா பெறுமதியான 80 முதல்வகுப்பு விமானச் சீட்டும், மிகுதி 50 பேருக்கும் விமானச் சீட்டைப் பெற 5 மில்லியன் ரூபா செலவானது என்றும் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.