பக்கங்கள்

05 செப்டம்பர் 2010

சிவத்தம்பிக்கும் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கும் தொடர்பில்லையாம்.



சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை முன்னின்று நடத்துவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென்கிறார் பேராசிரியா கார்த்திகேசு சிவத்தம்பி.
இது தொடர்பில் அவர் கருத்த வெளியிடுகையில் அவுஸ்திரேலியாவில் இருந்து அவரது நண்பர் ஒருவர் அவரிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்டதாகவும் ஆயினும் இலங்கையில் நடைபெறும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இதனை இங்கு நடத்துவது சாத்தியமில்லையெனத் தெரிவித்ததாக சொன்னார்.
நடைபெற இருக்கும் மாநாடு பற்றி தனிப்பட்ட ரீதியாக கூட தனக்கு எதுவும் தெரியாத நிலையில் தானே முன்னின்று நடத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென அவர் தெரிவித்தார்.
ஊடகங்கள் செய்திகளுக்கு பதிலாக ஊகங்களின் அடிப்படையில் கருத்துக்களை வெளியிடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.