பக்கங்கள்

22 செப்டம்பர் 2010

பழையதை மறந்துவிடுவோம் – கை நீட்டுகிறார் மகிந்தா.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அங்கு நோர்வே பிரதமர் ஜென்ஸ் ரோல்ரென்பேர்க்கை சந்தித்து கலங்துரையாடியுள்ளார்.
பழைய சம்பவங்களை மறந்து சிறீலங்கா அரசுடன் புதிய உறவுளை ஏற்படுத்த நோர்வே அரசு முன்வரவேண்டும் என சிறீலங்கா அரச தலைவர் நோர்வே பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளும், வர்த்தகம், முதலீடுகள் மற்றும் காலாச்சார மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மகிந்தா தெரிவத்துள்ளதாக சிறீலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரான் அரச தலைவரையும் மகிந்தா சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிராந்திய ஆதிக்கப் போட்டிகளில் போட்டியிடும் நாடுகளை தனது இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இதுவரை காலமும் அனுசரித்து நடந்துகொண்ட சிறீலங்கா அரசுகள் அதன் மூலம் தாம் நினைத்ததை சாதித்தும் வந்திருந்தன. இந்த நிலையில் தற்போதும் அவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தவே மகிந்தா தந்திரமாக முயல்வதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.