பக்கங்கள்

10 செப்டம்பர் 2010

நாஸிகளின் யுகத்தில் கனடா!

நாட்டுக்கு வருகின்ற அகதிக் கப்பல்களைத் தடுத்து நிறுத்த கனேடிய அரசினால் எடுக்கப்பட இருக்கின்ற கடும்போக்கான நடவடிக்கைகள் நாஸிகளின் யுகத்துக்கு உரியன என்று அந்நாட்டின் லிபரல் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
அக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் பிரித்தானிய- கொலம்பிய தீவின் லிபரல் ரைடிங் அசோஸியேசன்ஸின் தலைவருமான ரோன் மெக்கின்னன் தெரிவித்துள்ளார்.
நாஸிகள் யூதர்களின் விமானங்களை வானத்தில் பறக்க விடாமல் தடுத்து நிறுத்த எடுத்திருந்த இறுக்கமான நடவடிக்கைகளையே அகதிக் கப்பல்களைத் தடுத்து நிறுத்த கனேடிய அரசு எடுக்க உள்ள இறுக்கமான நடவடிக்கைகள் நினைவுபடுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் வைத்து சட்டவிரோத படகுகளையும், கப்பல்களையும் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட அதிகாரத்தை கனடா பெற்றுக் கொள்ளுதல் , சட்டவிரோத பயணிகளை படகுகள், கப்பல்கள் போன்றவற்றில் ஏற்றி வருகின்ற கப்டன்மார், மாலுமிகள், சிப்பந்திகள் போன்றோருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்குதல், படகுகளும், கப்பல்களும் பாரிய கடல்களை அடையும் முன்பாகவே இடைமறிக்கும் வகையில் இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல் என்று கனேடிய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கின்ற இந்நடவடிக்கைகளை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். கன்சேர்வேட்டிவ் கட்சியின் இக்கடும்போக்கான திட்டங்கள் நாட்டில் கலவரங்களையே தோற்றுவிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.