பக்கங்கள்

21 செப்டம்பர் 2010

சீமானின் வழக்கு விசாரணை நாளைய திகதிக்கு ஒத்திவைப்பு.

தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைகப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவ்வழக்கு விசாரணை நாளை 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவுள்ளது.
இவ் வழக்கிற்கான இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்க பட்டு இருந்தது, இந் நிலையில் இன்று சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு நீதி மன்ற நேரம் முடிந்ததால் நாளை இவ் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.