பக்கங்கள்

06 செப்டம்பர் 2010

கோஷ்டி மோதலில் பல்கலை மாணவர்கள்.



கட்டுநாயக்கவில் இரு குழுக்களிடையே நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவரும் ஏனைய இருவரும் காயமடைந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரிஷாந்த தெரிவித்தார்.கட்டுநாயக்கவிலுள்ள பொறியியல் கல்லூரியொன்றின் முதலாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் இது தொடர்பாக மூவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
அதேவேளை கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் ரயில்கடவையில் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவத்திற்கும் மேற்படி கோஷ்டி மோதலுக்கும் தொடர்பில்லை எனவும் ரயில் சமிக்ஞையை புறக்கணித்துச் சென்றதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.