பக்கங்கள்

15 செப்டம்பர் 2010

தனித்தமிழ் ஈழமே மதிமுகவின் கொள்கை!

அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் மதிமுகவின் திறந்த வெளி மாநாடு சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மாநாட்டிற்கு தலைமையேற்றுள்ளார். மாநாட்டில் 15ஆயிரம் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இம்மாநாட்டில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் தீர்மானம்: காவிரி ஆறு,முல்லைப்பெரியாறு,பாலாறு போன்றவற்றிற்கு தமிழகத்திற்கான பங்கைப்பெறுவதில் திமுக அரசு தனது ஆட்சிக்காலத்தில் தவறிவிட்டது.
இதனை மதிமுக வன்மையாக கண்டிப்பதோடு தமிழகத்திற்காக உரிமைக்காக மதிமுக தொடர்ந்து போராடும்.
இரண்டாவது தீர்மானம்: இந்தியா என்பது பல நாடுகள் இணைந்ததே இந்தியாவாகும். இந்நாடுகளூக்கு சுயாட்சியுடன் இருக்க மதிமுக போராட்டங்களை நடத்தும். முதற்கட்டமாக இந்தியா என்ற பெயருக்கு பதிலாக இந்திய ஐக்கிய நாடுகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
மூன்றாவது தீர்மானம்: இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவித்த சிங்கள ராஜபக்சே அரசுக்கு ஆதரவு வழங்கிய இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். அதோடு அம்மக்களுக்கும் தனித்தமிழ் ஈழமே இறுதித்தீர்வு. தனித்தமிழ் ஈழம்தான் அம்மக்களை சுதந்திரமான,நிம்மதியான வாழ்வுக்கு அழைத்துச்செல்லும்.
அதனால் தனித்தமிழ் ஈழத்திற்காக அம்மக்களோடு இணைந்து மதிமுக தொடர்ந்து போராடும். தனித்தமிழ் ஈழமே மதிமுகவின் கொள்கை.
இந்த மூன்று தீர்மானங்களை மதிமுகவின் கட்சி முக்கியஸ்தர்கள் முன்மொழிந்தனர். தொண்டர்கள் கைத்தட்டலும் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.