பக்கங்கள்

01 பிப்ரவரி 2013

விமல் அமெரிக்காவிற்கு எதிரான கருத்தை ஆங்கிலத்தில் சொல்லவேண்டும்!

இலங்கை வந்துள்ள அமெரிக்க குழு தொடர்பில் அரசியல் அரங்கில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கே அவர்கள் இலங்கை வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போதும் அவர்கள் மூவர் இலங்கை வந்துள்ளனர். மார்ச் 15 ஆம் திகதி ஜெனிவாவில் இடம்பெறவுள்ள யுத்த குற்ற விசாரணைகளுக்கு ஆதாரம் திரட்டுவதற்கே இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.இது தொடர்பில் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்த, அமெரிக்கா தொடர்ப்பில் விமல் வீரவன்ச, தமது கருத்தை ஆங்கிலத்தில் வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டார். அமெரிக்கா தம்மை ஏமாற்றுவதாக விமல் வீரவன்ச கூறுகின்றார். ஆனால் அதனை சிங்களத்தில் கூறுகிறார். இதனை அவர் ஆங்கிலத்தில் கூறவேண்டும், இவர்கள் இப்படி செய்கிறார்கள் அப்படி செய்கிறார்கள் என்று அவர் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.