பக்கங்கள்

03 பிப்ரவரி 2013

வடக்கில் பாரிய உண்ணாநிலை போராட்டம்!

வடக்கு மக்கள் பாரியளவிலான உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 15ம் திகதி சுமார் 20000 வடக்கு பொதுமக்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி இந்தப் போராட்டத்தை நடாத்தத் தீர்மானித்துள்ளனர்.தெல்லிப்பழை துர்காதேவி கோயிலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. யுத்த காலத்தில் படையினர் பயன்படுத்திய காணிகளை பொதுமக்களுக்கு மீள வழங்குமாறு கோரியே இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.