பக்கங்கள்

18 பிப்ரவரி 2013

பிரபல ஆங்கில ஆசிரியர் எஸ்.பி.ஐயர் காலமானார்!

யாழ்ப்பாணம்,கொழும்பு ஆகிய இடங்களில் பிரபல ஆங்கில ஆசிரியராக திகழ்ந்த எஸ்.பி.ஐயர் என்று அழைக்கப்படும் செல்லையா ஐயர் பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் 15-02-2013 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானதாக அவரது குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வி கற்பிப்பதில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி,மாணவர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்து நகைச்சுவையூடே தனது புலமையை மாணவர்களுக்குள் புகுத்தியவர் எஸ்.பி.ஐயர் அவர்கள்.அவரது இறுதி நிகழ்வுகள் நாளை செவ்வாய்க்கிழமை (19.02.2013)நண்பகல் 12.00மணியிலிருந்து 13.00மணிக்குள்St.Marylebone Crematorium East End Road FInchey,London, N20 Rz என்ற முகவரியில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.