பக்கங்கள்

05 பிப்ரவரி 2013

மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கைதிகள் உண்ணாவிரதம்

மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கோரி போகம்பர சிறைச்சாலை கைதிகள் மூவர் சிறைச்சாலை கட்டட கூரையில் ஏறி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று (05) காலை தொடக்கம் கைதிகள் மூவரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சிங்கள கைதிகள் இருவரும் தமிழ் கைதி ஒருவரும் இவ்வாறு உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கொலையுடன் தொடர்புபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் மூவரும் தங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களை கீழிறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போகம்பர சிறை அதிகாரி திஸ்ஸ ஜயசிங்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.